வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சவுதிஅரேபியாவில் இருந்து நாடு திரும்பியவர்களில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை 2839 இருந்து 2841 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதரியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 12 பேர் இன்று குணமடைந்து வெளியேறியதை அடுத்து இதுவரை குணமடைந்து வெளியேறியவர்களது மொத்த எண்ணிக்கை 2576 ஆக உயர்வடைந்துள்ளது.இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 254 ஆக உள்ளதுடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு கொரோன தொற்றுக்கு இலக்கான இருவருக்கும் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்டுத்தப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களது பரிசோதனை மாதிரிகள் யாழ் போதனா கொரோனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் தொற்று உறுதியாகி இருந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்